அபுஜா: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் போகோஹரம் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போர்னோ ஸ்டேட் பகுதி அருகே தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசோப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அங்கு வந்த போகோஹரம் தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். பல விவசாயிகளை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். கையில் சிக்கியவர்களின் கைகளை கட்டி கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் 110 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.