டெக்ரான்: ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் சூத்ரதாரியாக இருந்தவர் மொஹ்சென் பக்ரிசாதே. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று, டெக்ரான் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது, அருகே வந்த வாகனம் திடீரென வெடித்தது. இதனால் நிலைகுலைந்துபோய் காரை நிறுத்தினார். அப்போது அவரது காரைச் சூழ்ந்துகொண்ட மர்மநபர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.உயிரிழந்த பக்ரிசாதேவின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரியான அலி ஷம்கானி, இஸ்ரேல் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.