பார்ல்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டி20ல் தென் ஆப்ரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.இந்நிலையில் 2வது டி20 போட்டி பார்லில் நடந்தது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டி காக் 30, ஜார்ஜ் லிண்டே 29, வாண்டெர் டுசன் 25* ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2, ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜார்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.