கணவன் இறப்பு, கடன் தொல்லை 2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை: விஷம் வைத்து வளர்ப்பு நாய் கொலை

மதுரை: கணவர் இறந்த துக்கம் மற்றும் கடன் தொல்லை பிரச்னையால், இரு மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். மதுரை அருகே ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன்.  மனைவி வளர்மதி (38). மகள்கள் அகிலா (19), பிரீத்தி (17). நேற்று அதிகாலை வளர்மதி தனது இரு மகள்களுடன் வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தினர். வளர்மதியின் கணவர் அருண்பாண்டியன். கட்டிட கான்ட்ராக்டர். காதல் திருமணம் செய்து கொண்டனர். திருச்சியில் குடும்பத்துடன் வசித்தபோது, அருண்பாண்டியன் மூளைக்காய்ச்சலுக்கு ஆளானார். இதனால் மனமுடைந்த இவர், மனைவியுடன் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தார்.

பின்னர் மதுரை ஒத்தக்கடையில் குடும்பத்துடன் குடியேறினார். கடந்த ஜூலை 27ல் நோய் முற்றிய நிலையில் உயிரிழந்தார். இந்த சோகத்தாலும், கடன் ெதால்லையாலும் மன அழுத்தத்தில் இருந்த வளர்மதி, இருமகள்களுடன் தற்கொலை  செய்ததாக உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளனர். அருண்பாண்டியன் குடும்பத்தினர் செல்லமாக ஒரு நாயையும் வளர்த்து வந்துள்ளனர். தங்களுக்கு பிறகு யாரும் அந்த நாயை கவனிக்க மாட்டார்கள் எனக்கருதி அதற்கும் விஷம் வைத்து கொன்றுள்ளனர். மேலும், வளர்மதி தன்னுடன் இருந்த தம்பி மகள் மேகலாவை (12), நேற்று முன்தினம் இரவு,  வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூங்க வைத்துள்ளார். இறந்த அகிலா பிஎஸ்சி 2ம் ஆண்டு, பிரீத்தி பிளஸ் 2 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: