மதுரை: கணவர் இறந்த துக்கம் மற்றும் கடன் தொல்லை பிரச்னையால், இரு மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். மதுரை அருகே ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். மனைவி வளர்மதி (38). மகள்கள் அகிலா (19), பிரீத்தி (17). நேற்று அதிகாலை வளர்மதி தனது இரு மகள்களுடன் வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தினர். வளர்மதியின் கணவர் அருண்பாண்டியன். கட்டிட கான்ட்ராக்டர். காதல் திருமணம் செய்து கொண்டனர். திருச்சியில் குடும்பத்துடன் வசித்தபோது, அருண்பாண்டியன் மூளைக்காய்ச்சலுக்கு ஆளானார். இதனால் மனமுடைந்த இவர், மனைவியுடன் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தார்.