தமிழகத்தில் மேலும் 1,410 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 62,616 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 1,410 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இதில் சென்னையில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7, 81, 915 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,456 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 7 லட்சத்து 59 ஆயிரத்து 206 பேர் குணமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 3 பேர், அரசு மருத்துவமனையில் 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: