மதுரை: போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது என அரசு தரப்பில் மதுரைக் கிளையில் வாதம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளை போல மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்துவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது. அடுத்த ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் அரசு தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.