சென்னை: நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கனிமவள கொள்ளையை தடுக்க கோரிய வழக்கில் 4 மாவட்டங்களில் 151 சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார் . 4 மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியத்தில் பற்றாக்குறையுள்ளது என தலைமைச்செயலர் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிற மாவட்டங்களில் உள்ள உபரி நிதியை பயன்படுத்த வலியுறுத்தினார்.