மதுரை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது. புகார் எழும் அனைத்து துணை வேந்தர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் முகாந்திரம் உள்ளதா எனப் பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன் எனவும் நீதிபதிகள் கேட்டனர்.