வேலூர்: தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும் பணியிடங்களுக்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆயுதப்படை 2ம்நிலை காவலர் பணிக்கு 3,784 இடங்களுக்கும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2ம் நிலைக் காவலர் பணிக்கு 6,545 இடங்களுக்கும், சிறைத்துறையில் 2ம் நிலைக் காவலர் பணிக்கு 119 இடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 இடங்கள் என மொத்தம் 10,906 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக செப்டம்பர் 26ம்தேதி முதல் அக்டோபர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.