கோவை: கோவை சுந்தராபுரத்தில் ஆள்மாறாட்டத்திற்க்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒடிசாவில் நிதி நிறுவன மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க தனது அலுவலகத்துக்கு வந்த பெண்ணை கொலை செய்து, மனைவி இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளனர்.