ஏழைகளும், விளிம்பு நிலையில் உள்ளோரும் அதிகாரம் பெற பணியாற்றியவர் :மறைந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வுக்கு பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி : ஏழைகளும், விளிம்பு நிலையில் உள்ளோரும் அதிகாரம் பெற பணியாற்றியவர் என மறைந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். .பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி. மற்றும் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கிரண் மகேஷ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  இதற்காக அவர், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.அவருக்கு வயது 59.  இவரது மறைவுக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கிரண் மகேஷ்வரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிரண் மகேஸ்வரியின் திடீர் மறைவு அதிக வருத்தமளிக்கிறது. ராஜஸ்தான் அரசில், எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ அல்லது கேபினட் அமைச்சராகவோ இருந்தபொழுது மாநில வளர்ச்சிக்கான பணிகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அதிகாரம் பெற பணியாற்றியவர். மகேஸ்வரியின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1994ம் ஆண்டு நடந்த நகராட்சி கவுன்சிலர், அதை தொடர்ந்து 5 ஆண்டுகள் மேயர் பதவி, பா.ஜ.க.வின் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணி தலைவர், மகளிர் அணி தேசிய தலைவர், தேசிய பொது செயலாளர் உள்ளிட்ட பதவிகளை கிரண் மகேஸ்வரி வகித்துள்ளார்.  உதய்பூர்-ராஜ்சமந்த் தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.பா.ஜ.க. தேசிய துணை தலைவராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார்.  கொரோனா தொற்றால் மரணம் அடைந்த கிரணுக்கு சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories: