×

இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிண் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கு கீழ் சென்றது; குணமடைந்தோர் எண்ணிக்கை 45-ஆயிரத்துக்கு மேல் சென்றது.

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.37 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 94.31 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 38,772 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,31,692 ஆக உயர்ந்தது.

* புதிதாக 443 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,139 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 45,333 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால், குணமடைதோர் எண்ணிக்கை 88,47,600 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,53,956 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.81% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.74% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 8.76.173 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 14,03,976 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : corona victims ,survivors ,India , In India, corona, healed, 45-thousand
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...