×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,333 பேர் கொரோனாவால் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 38, 772 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,31,692-ஆக உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 443 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,37,139-ஆக உள்ளது. இந்நிலையில் 24 மணி நேரத்தில் 45,333 பேர் குணமடைந்துள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 88,47,600-ஆக உள்ளது. எனவே தற்போது 4,46,952 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : India ,Federal Health Department , In India, 45,333 people, cured by corona, were discharged
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...