பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக 400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் டீ, காபி

ஜெய்ப்பூர்: ‘‘நாடு முழுவதும் தற்போது 400 ரயில் நிலையங்களில் மண் குவளை பயன்படுத்தப்படுகிறது,’’ என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளார். பிளாஸ்டிக் கப்கள் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளையை பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, வாரணாசி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி தற்போது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து ராஜஸ்தானின் திகாவரா ரயில் நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ‘‘தற்போது நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் டீ தரப்படுகிறது. நாட்டின் அனைத்து ரயில் நிலையத்திலும் மண் குவளை பயன்பாட்டை கொண்டு வருவதே எங்கள் இலக்கு. இதன் மூலம், பிளாஸ்டிக் அல்லாத ரயில் நிலையங்களாக மாறும். மண் குவளை சுற்றுசூழலக்கு நல்லது மட்டுமின்றி இதன் மூலம் உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெறுவர்,’’ என்றார்.

Related Stories: