புதுடெல்லி: கடந்த 6 மாதமாக ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாத 5.43 லட்சம் நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வணிகர்கள், நிறுவனங்கள் மாதந்தோறும் 20ம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை 80 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மாதம் கணக்கு தாக்கல் செய்த, அதிக ஜிஎஸ்டி செலுத்துபவர்களில் சுமார் 25,000 பேர், நடப்பு மாதத்தில் கடந்த 20ம் தேதி ஜிஎஸ்டி கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை.