சென்னை: தமிழகத்தில் நேற்று 67,145 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,471 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.