தமிழகத்தில் மேலும் 1,459 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 67,145 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,471 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

11 ஆயிரத்து 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 2 பேர், அரசு மருத்துவமனையில் 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,703 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: