புதுடெல்லி: மத்திய பெண் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் கான்பூரில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது உமிழ்நீர் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஹலாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.