ஆரல்வாய்மொழி: செண்பகராமன்புதூர்-இந்திரா காலனியில் ஜெபகூட்டம் நடத்துவது சம்மந்தமாக இந்திரா காலனியை சேர்ந்த ராமர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி நாகர்கோவில் டி.எஸ்.பி வேணுகோபால் தலைமையில் நேற்று இரவு காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜ.க மாவட்ட பொதுசெயலாளர் சொக்கலிங்கம், தோவாளை ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் உள்பட 8 பேரும், தினகரன் என்பவரது தரப்பில் வழக்கறிஞர் புனிததேவகுமார், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்க தலைவர் ராஜகிருபாகரன், ரெஜிமோன் உள்பட 7 பேரும் பங்கேற்றனர். தொடர்ந்து ஆரல்வாய்மொழி ஆய்வாளர் ஜானகி இரு தரப்பினரிடமும் தலா 3 பேர்களிடம் தனித்தனியாக 2 முறை பேச்சு வார்த்தை நடத்தினார்.