டெல்லி: பழமையான அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 100 ஆண்டுக்கு முன் வாரணாசியில் இருந்து கடத்தப்பட்ட சிலை, இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் கலாச்சாரம், வேதம் எப்போதும் உலகை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.