ஒரே நாளில் 1,430 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 66,063 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,430 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 046 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,453 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 7 லட்சத்து 56 ஆயிரத்து 279 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 ஆயிரத்து 073 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,694  ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: