புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீன ராணுவத்தை. கடந்த மே மாதம் இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது முதல், இந்த எல்லையில் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. எல்லையில் இருநாடுகளும் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன. இப்பிரச்னைக்கு சமூக தீர்வு காண, இருநாடுகளும் இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில், படைகளை வாபஸ் பெறுவதாக சீனா கூறியுள்ள போதிலும், இதுவரையில் அதை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே, குளிர்காலத்தில் அது இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.