ராமேஸ்வரம்: நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, எட்டு நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர். நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 800க்கும் அதிகமான விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்பாக கரை நிறுத்தப்பட்டது. மீனவர்கள் மாற்று வேலைக்கு சென்றனர். இந்த நிலையில், நிவர் புயல் கரையை கடந்தது. பாக்ஜல சந்தி கடலில் வழக்கமான நிலை திரும்பியது.