×

தமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.79 லட்சமாக உயர்வு; 11,073 பேருக்கு சிகிச்சை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,79,046-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,79,046 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,56,279 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,453 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,694 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 393 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,14,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,19,30,240 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 66,063 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 220 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,70,670 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 878 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,08,342 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 552 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Tags : Corona ,victims ,Tamil Nadu , Corona for another 1,430 in Tamil Nadu; The number of victims has risen to 7.79 lakh; 11,073 people treated !!!
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...