திண்டுக்கல்,: திண்டுக்கல் அடுத்துள்ள முள்ளிப்பாடி பஞ்சாயத்தில் பணிகளை செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர் டார்ச்சர் கொடுப்பதாக கூறி பெண் பஞ்சாயத்து தலைவர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மாதவி. துணைத்தலைவராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. வார்டு உறுப்பினர்களான பிச்சைமணி, திருமலைச்சாமி, முரியஜெயசீலி, ஜான்பீட்டர், கிருஷ்ணமூர்த்தி, காளியம்மாள், ராக்கம்மாள், பாப்பாத்தி, லட்சுமிராஜா, ஜெயலட்சுமி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.