கேப்டவுன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடை யே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி நேற்றிரவு கேப்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது .இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டூபிளசிஸ் 58 (40பந்து), வான்டெர் டுஸ்சன் 37, கேப்டன்டிகாக் 30 ரன்எடுத்தனர். இங்கிலாந்தின் டாம் குர்ரன் 3விக்கெட் எடுத்தார்.