தேனி: தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் பகுதிகளில் மல்லித்தழை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மல்லித்தழையை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும். சபரிமலை சீசனில் மல்லிதழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். இதை கருத்தில் கொண்டு, தேனி அருகே பள்ளபட்டி மற்றும் வாய்க்கால்பட்டி பகுதியில் விவசாயிகள் மல்லிதழை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஆனால், சந்தையில் ஒரு கிலோ மல்லிதழை ரூ.1க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.