ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே, சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, கடந்த 10நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் மக்கள் மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமலும், சீரான குடிநீர் வினியோகம் செய்யாமலும் காலம் தாழ்த்தினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் மற்றும் நண்பர்கள் வட்டார குழுவினர் காளியாபுரம் பிரிவு பகுதியில் நேற்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ஆனைமலை செல்லும் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.