சென்னை: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நிவர் புயலின் போது சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் காலங்களிலும் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.