தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை: தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. டிசம்பர் 2 -ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம், புதுச்சேரியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: