இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 41,322 பாதிப்பு, 485 பேர் உயிரிழப்பு: மொத்த பாதிப்பு 93,51,109 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.36 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 93.51 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 41,322 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,51,109 ஆக உயர்ந்தது.

* புதிதாக 485 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,36,200 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,452 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 87,59,969 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,54,940 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.68% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.87% ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: