×

படுக்கையில் இறந்து கிடந்த 2 வாலிபர்கள்

* நாய் குட்டிகளும் சாவு * ஜெனரேட்டர் வாயு கசிவு காரணமா?

செய்யூர்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்.ராஜேஷ் (28), கே.ராஜேஷ் (32). கட்டிட தொழிலாளர்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும், செய்யூர் அடுத்த லத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பண்ணையில் கட்டுமான பணிக்காக வந்தனர். அங்கேயே தங்கி வேலை செய்தனர். மேலும் அவர்கள், 2 நாய் குட்டிகளை அறையில் வளர்த்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 2 பேரும், அறைக்கு சென்றனர். அப்போது, ஏற்பட்ட மின்தடையால், அங்குள்ள சிறிய ஜெனரேட்டரை இயக்கி அதிலிருந்து செல்போன்களுக்கு சார்ஜ் இணைப்பு கொடுத்துவிட்டு தூங்கினர்.இந்நிலையில், நேற்று காலை பண்ணையின் காவலாளி ஆறுமுகம், 2 பேரையும் பார்க்க சென்றார். நீண்ட நேரமாக அறை கதவை தட்டியும், அவர்கள் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு, இருவரும் சடலமாக கிடந்தனர். அருகில், அவர்கள் வளர்த்த 2 நாய் குட்டிகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கதவை பூட்டிக்கொண்டு ஜெனரேட்டரை இயக்கியபோது, அதிலிருந்து வந்த மோனாக்சைடை சுவாசித்து இறந்தார்களா அல்லது வேறு காரணமாக என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.



Tags : teenagers , 2 teenagers lying dead in bed
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...