×

சேக்காடு ஏரியில் தொழிலாளி சடலம் மீட்பு

ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் திருப்பதி(55). கூலி தொழிலாளி. இவர், தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், கடந்த 23ம் தேதி திருப்பதி சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார். பின்னர், அவர் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஆவடி அருகே சேக்காடு ஏரியில் ஒரு சடலம் மிதப்பதாக ஆவடி போலீசாருக்கு தகவல் இருந்தது.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, ஏரியில் இறந்தவர் மாயமான திருப்பதி என்பது தெரியவந்தது. மேலும், இவரது சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இதனையடுத்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதி ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா என விசாரிக்கின்றனர்.




Tags : Sekkadu Lake , In Sekkadu Lake Worker Corpse recovery
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...