திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த சின்னராசு என்பவர் சிக்கன்னா கல்லூரி எதிரே ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தார். கடந்த 3ம் தேதி அந்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக தகவலறிந்து வடக்கு போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. விசாரணையில் கொலையானவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி (31) என்ற கூலித் தொழிலாளி என்பது தெரிந்தது. அவருடன் தங்கியிருந்தவரும், வேறு ஒரு கொலை விவகாரத்தில் சிறையிலிருப்பவருமான சங்கர் (30) என்பவரை போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இசக்கியை அவர் ெகாலை செய்ததை ஒப்புக்கொண்டார்.