சென்னை: தொழிற்சங்க நிர்வாகிகளை நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 4 கட்டங்களாக மின்வாரிய தலைவர் சந்திக்க முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை, துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளை தனியார் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதுகுறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனை தெரிவிக்க தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், கோரிக்கைகளை எடுத்துக் கூற வரும் அவர்களை மின்வாரிய தலைவர் சந்திப்பதில்லை எனவும் தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த வாரம் மின்வாரியத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளும், அண்ணா சாலையில் உள்ள தலைமையகத்தில் ஒன்று கூடினர்.