சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தன. இதேபோல், பயணிகள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், தற்போது புயல் கரையை கடந்து தெளிவான வானிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்தது. உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு 102 விமானங்கள் இயக்கப்பட்டன.