டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்
மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அகமதாபாத்தில் உள்ள ஸைடஸ் பயோடெக் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்ககளில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசிக்க உள்ளார்.