சென்னை: கணக்கு எடுக்கிறோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மின்சாரம் துண்டிப்பால் சென்னை மாநகரில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை புறநகரில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை வெளியேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.