ஊட்டி: ஊட்டி அருகே 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்த பழங்குடியின இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடி, வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மாதன். இவரது மகன் ஈஸ்வரன் (24). பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஈஸ்வரன் கடந்த 26.12.2018 அன்று இதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்தார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.