இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 43,052 பாதிப்பு, 492 பேர் உயிரிழப்பு: மொத்த பாதிப்பு 93,09,787 ஆக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 93.09 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 43,052 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,09,787 ஆக உயர்ந்தது.

* புதிதாக 492 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,35,715 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,379 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 87,18,517 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,55,555பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.65% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.89% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,31,204 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 13,70,62,749 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories: