பழநி: பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலியாக, முகநூல் பக்கத்தில் இருந்த பழநி திருஆவினன்குடி கோயில் மூலவர் படத்தை பாஜ கட்சியினர் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பாஜ சார்பில் கடந்த 23ம் தேதி வேல் யாத்திரை நடந்தது. கொரோனா கால சமூக இடைவெளியின்றி பொதுக்கூட்டம் நடத்தியது, வின்ச்சில் பாஜ கட்சியினர் கும்பலாகச் சென்றது ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பாஜவினர் கொண்டு வந்த வேலை மலைக்கோயில், திருஆவினன்குடி கோயிலில் உள்ள கருவறையில் வைத்து வழிபாடு செய்யவும் வற்புறுத்தினார். ஆனால் அதை அனுமதிக்கவில்லை.