திருத்தணி: திருத்தணி பகுதியில் நிவர் புயல் மழைக்கு 21 வீடுகள் சேதமாயின. திருத்தணியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவலாங்காடு ஒன்றியத்தில் ஜாகிர்மங்கலம், திருவாலங்காடு , பூனி மாங்காடு, நெமிலி, பழையனூர், பொன் பாடி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசித்த இருளர் இன குடும்பத்தினர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக ஆற்காடு குப்பம் கிராமத்தில் அண்ணாமலை என்பருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை மேற்கூரை உடைந்து விழுந்து பசு மாடு மற்றும் கன்று இறந்தது. மேலும் 21 வீடுகள் சேதமாயின.