புதுடெல்லி: தலைநகரில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடுத்த வக்கீல் ஒருவர், தனது மனுவில், மாதிரி சோதனைகளை அதிகரிக்க அரசுக்கு உத்தரவிடும்படி குறிபிட்டு இருந்தார். அது தொடர்பான நேற்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, சுப்ரமண்யம் பிரசாத் ஆகியோர் கூறுகையில், ‘‘திருமணங்களில் 50 பேருக்கு மேல் கும்பல் கூடக் கூடாது எனும் கொரோனா விதியை அரசு எப்படி கண்காணிக்கிறது. இதற்காக எதாவது குறிப்பிடத்தக்க நடைமுறையை உருவாக்கி கண்காணிக்கிறீர்களா’’, எனக் கேள்வி எழுப்பினர்.