புதுடெல்லி: காசிப்பூர் குப்பைக்கிடங்கு தீவிபத்து தொடர்பாக சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி முன்பு ஆஜராகும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி கமிஷனருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட காசிப்பூர் குப்பைக்கிடங்கில் செவ்வாய் இரவு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ புதன்கிழமைதான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் கிழக்கு டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த பிரச்னையில் சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி கமிஷனருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி தலைவர் அடிசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காசிப்பூர் குப்பைக்கிடங்கு தீவிபத்து குறித்து சட்டசபை கமிட்டி முன் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி கமிஷனருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.