சென்னை: “குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி தொற்று மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: நிவர் புயலால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை ராட்சத குழாய்கள் மூலம் அகற்றுவதற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.