சென்னை: தமாகா மூத்த துணை தலைவர் ஞானதேசிகனுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஞானதேசிகனின் தாயார் மீனாட்சியம்மாளுக்கும் (90) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று காலை அவர்உயிரிழந்தார்.தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஞானதேசிகன் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.