×

கரையை கடந்தது நிவர் புயல் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

சென்னை : நிவர் புயல் மீட்பு பணியில் இந்திய ராணுவ மீட்பு குழுக்களுக்கு புதுச்சேரி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். நிவர் புயல் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தென் பிராந்தியம் சார்பில் புதுச்சேரி, சென்னை மற்றும் திருச்சியில் மொத்தம் 22 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள ராணுவம் சார்பில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது.

இந்த குழு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருந்தனர். புயல் கரையை கடந்த பிறகு இந்த குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக சாலையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்களின் மீட்பு பணிகளுக்கு புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை அமைச்சர் ஷாஜகான் பாராட்டுகளை தெரிவித்தார்.



Tags : Soldiers ,storm rescue operation ,Nivar , Nivar storm Soldiers involved in the rescue operation
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை