சென்னை: சென்னையில் புறநகர் சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று மதியம் 3 மணிக்கு மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை புறநகர் ரயில் சேவை இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்றும், இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.