குன்னூர்: நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர், குன்னூர் போன்ற பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. கால நிலைக்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் என விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அதிகளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கேரட் பயிரிட்டு அறுவடை காலம் 5 முதல் 6 மாதம் வரையாகும். சில விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை கேரட் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிடுகின்றனர்.