×

கேத்தி பாலாடா பகுதியில் 6 கிலோ வெள்ளை முள்ளங்கி : விவசாயிகள் ஆச்சரியம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர், குன்னூர் போன்ற பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. கால நிலைக்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் என விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அதிகளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கேரட் பயிரிட்டு அறுவடை காலம் 5 முதல் 6 மாதம் வரையாகும். சில விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை கேரட் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிடுகின்றனர்.

அதில் முள்ளங்கி, கீரைவகை, அவரை, பட்டானி  உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். கேத்தி பாலாடா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கேரட் தோட்டங்களில் ஊடு பயிராக வெள்ளை முள்ளங்கியை பயரிட்டு அதனை அறுவடை செய்துள்ளார். தற்போது வெள்ளை முள்ளங்கி நன்கு வளர்ந்து ஒரு முள்ளங்கி சுமார் 5 முதல் 6 கிலோ எடையுடன் பெரிதாக இருந்துள்ளது. பெரிதாக காணப்பட்ட வெள்ளை முள்ளங்கியை கண்டு அறுவடையில் ஈடுபட்ட தொழிலாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர்‌. இது குறித்து கூறிய விவசாயி வெள்ளை முள்ளங்கி விதையில் ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக பெரிதாக வளர்ந்திருக்க கூடும் என்றார். மேலும் அவற்றை விவசாயி விற்பனை செய்யாமல்  சொந்த பயன்பாட்டிற்கு கொண்டு சென்றார்.



Tags : area ,Kathi Balada , Kathy Balada, 6kg, white radish
× RELATED வாட்டி வதைக்கும்...