திருமயம்: தினகரன் செய்தி எதிரோலியால் திருமயம் பகுதியில் வர்ணம் பூசாத வேகத்தடைகள் அனைத்தும் எளிதில் அழியாத வகையில் வர்ணம் பூசப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தாலுகா அலுவலம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நூலகம், கடைகள் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் பள்ளி மாணவிகள், மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகம் இருக்கும். மேலும் இதன் வழியாக தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து மதுரைக்கு அதிகளவு பஸ்கள், வாகனங்கள் சென்று வருவதால் அப்பகுதியில் நடமாடும் மக்கள் சாலையை கடக்க அஞ்சி வந்த நிலையில் பொதுமக்கள், பள்ளி மாணவிகள் நலன் கருதி அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் அறியும் வகைளில் வர்ணம் பூசாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தில் வாகன ஓட்டிகள் வேகத்தடையை முன்கூட்டியே அறியும் வகையில் எச்சரிக்கை பலகை வைத்ததோடு, வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது.